வைரல்: வங்கி ஏடிஎம் இயந்திரத்துடன் சண்டை செய்த போதை ஆசாமி…!
தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது குடியாத்தம் போலீசார் விசாரணை, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சந்தப்பேட்டை பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது அங்கு பேங்க் ஆப் பரோடாவிற்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது
இதனிடையே இன்று அதிகாலை குடிபோதையில் வந்த போதை ஆசாமி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து தான் வைத்திருந்த சுத்தியால் கேமராவை உடைத்துள்ளார் இதனால் அபாய ஒலி ஒலித்துள்ளது
இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று ஏடிஎம் மையத்தில் குடிபோதையில் இருந்த ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவன் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி(25) என்பதும் குடிபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது மேலும் கார்த்திகை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.