தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை முதலே தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சாரல் மழை முதல் கனமழை வரை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் பட்டினம்பாக்கம், மந்தவெளி, சாலிகிராமம், கே.கே.நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதலே லேசான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு ஒருசில இடங்கலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *