RAID: பல கோடி ரூபாய் மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்…!
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தொடர்புடைய ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம் ஆர் கணேஷ் மற்றும் எம் ஆர் சாமிநாதன் ஆகியோர்களது வங்கி லாக்கர்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை.
கும்பகோணத்தில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம் ஆர் கணேஷ், எம் ஆர் சுவாமிநாதன் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர்.
மேலும் இவர்கள் மீது செக் மோசடி வழக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் ஆஜர் ஆவதற்காக நேற்று முன்தினம் எம் ஆர் கணேஷ் மற்றும் எம் ஆர் சுவாமிநாதன் ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில் இவர்களுக்கு கும்பகோணத்தில் உள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதிநிறுவன பெசன்ட் ரோடு கிளையில் லாக்கர்கள் உள்ளன. இந்த லாக்கர்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தஞ்சாவூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.