வடமாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற நபர் குண்டாஸில் கைது…!

கோவை செட்டிபாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது.  

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கேவத் (37). இவர் கடந்த ஜனவரி மாதம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சார்லஸ் என்பவருடன்  மது குடிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கேவத்தை, சார்லஸ் அடித்து கொலை செய்து தப்பிச் சென்றார். 

செட்டிபாளையம் போலீசார் சார்லஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வட மாநில தொழிலாளியை கொன்ற சார்லஸை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். இதையடுத்து சார்லஸ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *