ராஜீவ் கொலை, ஏழு தமிழர் விடுதலைக்கு இதுதான் காரணம்… முன்னாள் நீதிபதி சதாசிவம் 

சேலத்தில் நடந்த அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது. ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் விடுமுறை நாளான சனிக்கிழமையில்  லோக் அதாலத் நடத்தப்பட வேண்டும். 

சொத்து தொடர்பான பாகப்பிரிவினை வழக்கில்  15 ஆண்டுகளாக தீர்ப்பை நீடிக்காமல் விரைந்து முடித்தால் தான் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைவார்கள் என்றார். ஆனால் சொத்து தொடர்பான நிலப்பிரச்சனையில் ஆண்டு கணக்கில் வழக்கு  நீடிப்பதாக  வேதனை தெரிவித்தார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனு,  ஏழு ஆண்டுகள்  உள்துறை அமைச்சகத்திடமே இருந்தது . இதனால் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினேன். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் ஆவணங்கள் உள்ளது அதை எடுத்து  வர  தாமதமாவதாக தெரிவித்தனர். அப்போது ஒரு லாரியில் எடுத்து வந்தால் கூட,  ஒரு வாரத்தில் எடுத்து வந்து விடலாமே என்று கேட்டேன். 

உரிய நேரத்தில் முறையான பதில் ஆவணங்கள் தாக்கல்  செய்யப்படாததால் தான்,  ராஜூவ்காந்தி கொலை வழக்கில் குற்றப்பட்டவர்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர் , அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போது 7 பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது என்றார். 

சேலத்தில் நடைபெற்ற அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க முதல் மாநாட்டில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *