இப்பல்லாம் ஜாதி யாரு பாக்குறா ப்ரோ….பாஜக தலைவரே சொல்றாரு கேளுங்க ப்ரோ….

-வெங்கட்ராம்

பாஜகவை விட்டு தலை தெறிக்க ஓடி வந்த பாஜகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் திலீப் தொலைபேசி வாயிலாக பேசியதாக ஒரு ஆடியோ பரபரத்துக் கொண்டிருக்கிறது. அதில் அவர் கூறியதாவது ‘ கட்சியை சேர்ந்த தலைவர்கள் என்னை ஜாதியை வைத்தே இழிவாக பேசினார்கள். நான் தலைமையிடத்தில் சென்று கூறினேன் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார். பாஜகவினர் பிரச்சனை என்று வந்தால் மட்டும் இந்துக்களே ஒன்றிணையுங்கள் இந்துக்களே ஒன்றிணையுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் கட்சிக்குள் நடக்கும் இது போன்ற வன்மங்களை கண்டுகொள்ளாமல் உள்ளார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்துக்கள் எல்லோரும் ஒன்று என்று பாஜக உருவாக்கிய பிம்பம் அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களாலேயே சுக்குநூறாக உடைக்கப்படுகிறது. இதுபோன்ற சில காரணங்கள் தான் இட ஒதுக்கீடு ஏன் முக்கியமானவை என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. தலைவலியும் ஜலதோஷமும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழி போல் தனக்கு ஏற்படும் போது தான் ஜாதி கட்டமைப்பு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *