நாட்டாமை பட பாணியில் குதிரை வண்டியில் வந்த சமக தலைவர் நடிகர் சரத்குமார்…!

மதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமணத்திற்கு நாட்டாமை பட பாணியில் குதிரை வண்டியில் வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் செல்வம் இவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும் தஞ்சாவூரு மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான சரத்குமார் பங்கேற்க மதுரை வருகை தந்தார். அவருக்கு நாட்டாமை பட பாணியில் சாரட் பூட்டிய குதிரை வண்டியில் கெத்தாக  ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.தொடர்ந்து அவர் மண்டபத்திற்குள் செல்லும் முன்பாக தடுத்து நிறுத்திய கட்சியினர். 

அவர் முன்பாக இரண்டு புஸ்மானத்தை கையில் பிடித்து வைத்து அவரை திகைப்புக்குள்ளாகினர். தொடர்ந்து மணமக்கள் இருவருக்கும் மாலை எடுத்து கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *