சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்… பெண்கள் கடும் எதிர்ப்பு…!

கேஸ் சிலிண்டருக்கான விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

சிலிண்டர்  விலை  மாதந்தோறும் விலை ஏறிக்கொண்டே வருவதால் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. குழந்தைகளுக்கான படிப்பு செலவு,  முதியோர்களுக்கான மருந்து செலவு என்ன மாதம் தோறும் பல்வேறு வகையில் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  அதில் சிலிண்டருக்கான விலை உயர்வு  தங்களை கடுமையாக பாதிக்கிறது. 

எனவே இனி மீண்டும் விறகடுப்பிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது உள்ள ஜன  நெருக்கடியில் விறகடுப்பும் வீட்டிற்குள் வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிலிண்டர் விலை 300 ரூபாய்க்கு விற்பனையானது ஆனால் தற்போது 1200 ரூபாய் உயர்ந்துள்ளது. இது சாதாரண நடுத்தர குடும்ப மக்களை கடுமையாக பாதிக்கிறது . எனவே உடனடியாக ஒன்றிய அரசு சிலிண்டர்  விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *