திருக்குறள் ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசம்… நெல்லையில் அசத்தல்அசத்தல்..!
திருக்குறள் ஒப்புவித்தால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம்: நெல்லையில் திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சிறுவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் திருக்குறள் ஒப்புவித்து இலவசமாக பெட்ரோல் வாங்கி சென்றனர்
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி ஆறுமுகம் ஏஜென்சி பெட்ரோல் பங்க் நிர்வாகம் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு நூறு ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தனர்
இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த திருக்குறள் ஒப்பிவித்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து திருக்குறளை ஒப்பித்தனர் அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மலைக்கண்ணன் சார்பில் 100 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது
சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் உலக பொதுமறைநை கற்றுக் கொடுக்கும் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சி இலக்கியவாதிகளிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது