டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதல்; 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி!

Child birth

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் சவலூரைச் சேர்ந்த முத்து (20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45), 3 மாத குழந்தை வர்ஷினி உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *