மாரடைப்பால் பலியான கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு 2 லட்சம்… கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்த தாய்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரிச்சிகாரன்பட்டியை சேர்ந்த தங்கவேல் மாரியம்மாள் தம்பதியினரின் மகன் மாணிக்கம்.இவர் சிறுவர்களுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் 20-2-23 அன்று கரூர் மாவட்டம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையான கபடி போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக சிறுவர்களை அழைத்து சென்று நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது சிறிய நெஞ்சுவலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார் இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாரடைப்பால் கபடி பயிற்சியாளர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் குஜிலியம்பாறை தாசில்தார் ரமேஷ் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளர் மாணிக்கம் அவர்களின் தாய் மாரியம்மாள் அவர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் காண காசோலையை வழங்கினார்.
காசோலையை பெற்றுக் கொண்ட மாணிக்கம் அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்கள் தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தன்னுடைய மகனின் உழைப்பை நம்பியே இருந்த சூழ்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் எங்களின் ஏழ்மையின் நிலமையை கருத்தில் கொண்டு நிவாரணம் உடனடியாக வழங்கியதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.