கரும்பு விவசாயிகள் 28 வது நாளாக காத்திருப்பு போராட்டம், தமிழக அரசு தலையிட வலியுறுத்தும் விவசாயிகள்

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், தமிழக அரசு இதில் தலையிட வலியுறுத்தியும் இன்று பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் 28 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இன்று தீச்சட்டியை கையில் ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவையாக வைத்துள்ளது. தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட கோரியும், தற்போது இந்த ஆலையை விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம், திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தை வழங்க வலியுறுத்தியும், கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 28 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  பாதிக்கப்பட்ட விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *