ஈரானில் வெடித்த ஹிஜாப் சர்ச்சை போராட்டம்..!! உயரும் பலி எண்ணிக்கை..!!

கடந்த வாரம் ஹிஜாப் முறையாக அணியாத தாகக் கூறி மஹ்சா அமினி காவல்துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். 

இதனால் ஈரானில் பல இடங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. ஒஸ்லோ வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறிய தகவல் படி, போராட்டக்காரர்களை அடக்க ஈரானிய பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 

ஈரான் மனித உரிமைகள் யக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம், வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிய மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை அடைவதற்காக வீதிக்கு இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். 

ஆனால், அரசாங்கம் மக்களுக்கு தோட்டாக்களால் பதிலடி கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். போராட்டம் முதலில் வடக்கு குர்திஸ்தான் பகுதியில் தொடங்கியது, அதன் பிறகு தற்போது ஈரான் முழுவதும் பரவியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமர்பூர் பேட்டி எடுக்கும் போது புர்கா அணிய மறுத்ததால் நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார் என்பது குறிப்பித்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *