மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ மறைவு: இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி..!!

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு வின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு 1979ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்தார்.

1963ல் இருந்து மலேசிய வானொலி, மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம், பொது பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர்.

வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை டத்தோ சாமிவேலு காலமானார். இவர் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்தவர். மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், ‘டத்தோ’ ஒரு மறக்கவியலா அத்தியாயம். அவரது இறுதி சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டத்தோ சாமிவேலு மறைவுக்கு இந்தியா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் டத்தோ சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர். எஸ்.சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *