உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்: மரத்தில் தொங்கிய தலித் சகோதரிகள்..!! நடந்தது என்ன..?
உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி பகுதியில் இரண்டு தலித் பெண்களை கற்பழித்து மரத்தில் தூக்கிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜுனைத், சோஹைல், ஹபிசுல், கரிமுதீன், ஆரிப் ஆகிய
ஆறு பேரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோட முயன்ற ஒருவரை துப்பாக்கி சூடு நடத்தி அடிபட்ட நிலையில் கைது செய்தது.இது குறித்து பேசிய உத்திரபிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக்
இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. குற்றம் செய்தவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க அரசு தனிப்படை அமைத்து செயல்பட்டு கொண்டு உள்ளது என்றார்.மேலும் இறந்த குடும்பத்திற்கு அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் தாய் கூறுகையில் எங்கள் பெண்களை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டதாக பொலிஸில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் எஃப்ஐஆர் பதிவு செய்ததை அடுத்து, குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மாநில அரசை கடுமையாக சாடினார். லக்கிம்பூரில் சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது. பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பொய்யான விளம்பரங்கள் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உ.பி.யில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன என்று குற்றம் சாடினார்.