மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உட்பட 3 பேர் போக்சோவில் கைது..!!

திண்டுக்கல்லை சேர்ந்த லிங்க மூர்த்தி என்பவர் மது அருந்த விட்டு அடிக்கடி தன் மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில் அவரது மனைவி லிங்கமூர்த்தியை பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக லிங்கமூர்த்தி தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் லிங்கமூர்த்தி அடிக்கடி சமையல் வேலைக்கு செல்வதால் தனது 12 வயது மகளை நண்பர் கண்ணன் வீட்டில் தங்க வைத்து வளர்த்து வந்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் மது போதையில் லிங்கமூர்த்தி தனது நண்பர் கண்ணன் உடன் சேர்ந்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் பாரதிபுரத்தில் அரிசி கடை நடத்தி வரும் முகமது ரபிக் என்பவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

POCSO Case | பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.. நண்பனும் உடந்தை -  போக்சோவில் இருவர் கைது / Villupuram man who Rapes his own daughter police  investigate the matter – News18 Tamil

இதனால், சிறுமியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பரிசோதனை செய்த பெண் மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தியதில் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை லிங்கமூர்த்தி அவரது நண்பர்கள் கண்ணன் மற்றும் முகமது ரபிக் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *