பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை தாங்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். கடந்த புதன்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவை டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது உலக பொருளாதாரம் குறித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பேசிய நிர்மலா சீதாராமன் கிரிப்டோ கரன்சிகளை, உலக முழுவதற்கும் ஒரே மாதிரியான விதிகளை கொண்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.
அந்த நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தலைமை தாங்க வேண்டும் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவிடம் தெரிவித்தார். அதையடுத்து, இதர பிரச்சனைகளுடன், உலகளாவிய பொருளாதாரத்தில் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜார்ஜிவா கூறினார்.