பெயர் மாற்றம் செய்வது அதிகாரத்தின் பித்துநிலை – காங்கிரஸ் கட்சி
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் புல்வெளிப் பகுதியை கர்தவ்ய பாதை என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வது அதிகாரத்தின் பித்துநிலை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது.
இந்தப் பெயர் மாற்றத்தை பாஜகவினர் கொண்டாடி வருகிறது. ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எல்லாவற்றிலும் தற்பெருமை பேசிக்கொள்ளும் அரசு அதன் பித்து நிலையில் இந்தப் பெயர் மாற்றத்தை செய்துள்ளதாக சாடியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இங்கே என்ன நடக்கிறது. நமது கலாசாரத்தை, பாரம்பரியத்தை மாற்றுவதையே பாஜக தனது ஒரே கடமையாக கொண்டிருக்கிறது. வரலாற்றை மாற்றி அதிகாரத்தைத் திணிக்கும் பித்து நிலையில் பாஜக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.