மதுபான உரிமம் முறைகேடு: முக்கிய மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி..!!
மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது, பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
மதுபான உரிமம் முறைகேடு வழக்கில் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19ஆம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்திய நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரகமும் சோதனை தொடங்கியது.
அதன்படி, டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். டெல்லி, ஹரியானா மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள், தனியார் நிறுவன வீடுகளில் சோதனை வருகின்றனர்.