இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!

இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார்.

பிரதமராக பதவி நீக்கம் செய்யப்பட்ட போரிஸ் ஜான்சனுக்கு பின் லிஸ் ட்ரஸ் பதவியேற்பார். டோரி தலைமைப் போட்டியில் லிஸ் டிரஸ் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து வெற்றி பெற்று உள்ளார்.

இந்த வெற்றி  குறித்து கூறுகையில் லிஸ் ட்ரஸ் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். 

எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நம் அனைவரையும் வெற்றிபெறச் செய்ய நான் துணிச்சலான நடவடிக்கை எடுப்பேன். இந்த கடினமான காலங்களில், நமது பொருளாதாரத்தை வளர்க்க பாடுபடுவேன் என லிஸ் ட்ரஸ் தனது வெற்றி உரையை முடித்தார். போரிஸ் ஜான்சன் விளாடிமிர் புடினுக்கு எதிராக நின்றீர்கள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *