குஜராத் விவசாயிகள் இனி கவலைப்பட தேவையில்லை –  ராகுல் காந்தி

குஜராத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு உள்ள கட்சி தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் கடன் தள்ளுபடி, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். 

மேலும் மாநிலத்தில் வேலைவாய்ப்பை பெருக்க காங்கிரஸ் முயற்சி செய்யும் என வாக்குறுதி அளித்தார்.  இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்றார்.  

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு பக்கம் உலகின் மிகப்பெரிய படேல் சிலையை கட்டி விட்டு மறுபுறம், யாருக்காக படேல் போராடினாரா, யாருக்காக தனது உயிரை தியாகம் செய்தாரோ அதற்கு எதிராக   பா.ஜ. க செயல்படுகிறது. 

இங்கு இரண்டு அரசியல் கட்சிகளுக்கு எதிராக போராடவில்லை . ஆளுங்கட்சி கைப்பற்றிய அமைப்புகளுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என குறிப்பிட்டார்.  

தொழிலதிபர்கள் கேட்டால் அவர் விரும்பிய நிலங்களை அரசு தரும். ஆனால், ஏழைகள் மற்றும் பழங்குடியினர் கேட்டால் அதை செய்ய மாட்டார்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *