வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: சாலையில் சாகசம் செய்யும் வாகன ஓட்டிகள்..!!
கடந்த சில வாரமாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள் பெய்த மழையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. படகுகள் மூலம் மக்களை வெளியேற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெல்லந்தூர், சர்ஜாபுரம் சாலை, ஒயிட்ஃபீல்டு, வெளிவட்டச் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கர்நாடகாவில் கனமழை வர வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.
மேலும் பெங்களூரில் கனமழை வரும் என எச்சரித்துள்ளது. கடலோரம் உள்ள மூன்று மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, ஷிவமொக்கா, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்கு செப்டம்பர் 5 முதல் 9 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. பெங்களூரில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பேரிடர் மீட்டு பணி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.