தாயகம் திரும்பினார் தப்பி ஓடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!

மக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு தப்பி ஓடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பல நாடுகளில் தஞ்சமடைந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். இலங்கை அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதற்கு  ராஜபக்சேவின்  தவறாக நிர்வாகம் என குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து, பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆட்சி அதிகாரங்களில் இருந்து  ராஜபக்சே குடும்பம் வெளியேறியது.

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே போன்றோர் வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில்  தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்தார் கோத்தபய ராஜபக்சே.

கோத்தபாயவை, அவரது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பதாகவும், ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தலைநகர் கொழும்பில் மையத்தில், முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *