பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம்..!! வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி..!

பாகிஸ்தானில்  ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு வருத்தம் அளிப்பதாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.  கடந்த ஜூலை மாத இறுதியில் பாகிஸ்தானில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியுள்ளது. 

இதில் சிந்த், பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறிய தகவல் படி, இந்த பருவமழை பாதிப்பால் சிக்கி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் மிகவும் வேதனையாக உள்ளது. வெள்ள பாதிப்பால் சிக்கித் தவிக்கும் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல் என ட்வீட் செய்துள்ளார்.  மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன் என்றார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க இந்தியா முன்வந்துள்ளது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *