காங்கிரஸ் தலைவர் போட்டி: சசி தரூர் போட்டியிட வாய்ப்பு..!!

காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவருக்கான உட்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. 

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை அக்டோபர் மாதம் 17ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சோனியா வழியில் ராகுல்? பழைய "சம்பவத்தை" அழுத்தமாக சொன்ன மல்லிகார்ஜுன்  கார்கே.. என்ன நடந்தது தெரியுமா | will Rahul be Congress next chief  Mallikarjun Kharge shares old ...

சோனியா காந்தி குடும்பத்தில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் தேர்தலில் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், இது குறித்து தற்போது எந்த கருத்தும் கூற முடியாது. தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு குடும்பம் மட்டுமே, அதை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையில் மட்டும் கட்சி செயல்படக் கூடாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *