உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யூயூ லலித் பொறுப்பேற்றார்..!
நாட்டின் 49 வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யூயூ லலித் பொறுப்பேற்றுக்கொண்டார். யூயூ லலித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள சில முக்கிய தீர்ப்புகளில் நீதிபதி யூயூ லலித் அங்கம் வகித்துள்ளார்.
தலைமை நீதிபதி லலித், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், டிசம்பர் 1985 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார், பின்னர் ஜனவரி 1986 இல் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். 1992 வரை, முன்னாள் அட்டர்னி ஜெனரல் மறைந்த சோலி ஜே சொராப்ஜியுடன் பணியாற்றிய அவர், ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
வழக்கறிஞராக, பல விஷயங்களில் அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் 2ஜி ஊழல் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் சிபிஐக்கு சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நடிகர் சல்மான் கானின் மான் வேட்டை வழக்கு, நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக சாலை தகராறு, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வழக்கு என பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.