பாகிஸ்தானில் தொடரும் கனமழை: அவசர நிலை அறிவிப்பு..!!
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து வரும் சூழ்நிலையில் அங்கு தேசிய அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கனமழை மழை காரணமாக இதுவரை 900 மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல பகுதிகளில் மழை அளவுக்கு அதிகமாக பெய்து வருவதால் அந்த இடம் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. 3 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பஹ்ரைன் என்ற பகுதியில், அடுக்கு மாடி கொண்ட வீடு ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி மற்றும் கார்கள் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் பருவ மழைக்காலம் தொடங்கியது முதல் பாகிஸ்தானில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் மழை, வெள்ளத்திற்கு பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரை ஆயிரம் கிலோ மீட்டர் அளவு கொண்ட சாலைகள் பல பாலங்கள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. பல ஆயிரம் குடியிருப்புகளும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.