முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்..!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி வீட்டுக்கு கொலை மிரட்டல் அழைப்பு  வந்த நிலையில் அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார். அவர் வீட்டுக்கு சுதந்திர தினமான இன்று மூன்று முறை கொலை மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இதை விசாரித்த மும்பை போலீஸ் முதல் கட்ட விசாரணையில் முகேஷ் அம்பானி நடந்தும் ஹர்ஸ்கிசந்தாஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு  மூன்று முறை அழைப்பு வந்தை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம் என்றார்.  

Reliance Mukesh Ambani family gets Calls Threatening 1 Detained from  Dahisar / ஒரே நாளில் 8 முறை முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்..  ஒருவர் கைது – News18 Tamil

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் முகேஷ் அம்பானி வீட்டுக்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்தாக ரிலையன்ஸ் நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது. 

அந்த புகாரின்  அடிப்படையில் சச்சின் வாஸ் தலைமையில் ஒரு தனிப்படை போலீஸ் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.  மும்பையில் மேற்கு புறநகரில் உள்ள தாஹிசார் பகுதியில் அச்சுறுத்தல் அழைப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளோம் என்றார். 

இன்னும் சில தினங்கள் கடந்து இந்த வழக்கு நேஷனல் இன்வெஸ்டிகேஷன் அமைப்பின் கீழ் சென்று விடும் என்றார். இதே போன்று கடந்த வருடம் முகேஷ் அம்பானி குடியிருப்புக்கு முன் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது  அதில் வெடிக்கும் தன்மை கொண்ட 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதம்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *