75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 75 வது சுதந்திர தின வாழ்த்துகள் அவர் தெரிவித்துக்கொண்டார். சுதந்திரத்திற்காக போரிட்ட பழங்குடி நாயகர்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் உத்வேகம் அளிப்பவர்கள் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

President Draupadi Murmu delivers her maiden I-Day eve speech | Full text  Xpert Times -

கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டதில் வியத்தகு சாதனை இந்தியா படைத்திட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த குடியரசுத் தலைவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் பெண்கள் பல தடைகளை உடைத்து முன்னேறி வருவதாக குறிப்பிட்ட திரௌபதி முர்மு, நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையே அவர்கள் தான் என்றார்.

நமக்கு அனைத்தையும் தந்திருக்கும் நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்திற்காகவும் நம்மாலான அனைத்தும் தந்து சிறப்பான இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *