வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்..!!
சிறிய வகை ராக்கெட்டான எஸ்எஸ்எல்சி இன்று விண்ணில் ஏவப்பட்டது. தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது வருகின்றன. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்கள் ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கை கோள்கள் பூமியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்சி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.
அந்த வகையில் 120 டன் எடை அதிகபட்சமாக புதிய வகை ராக்கெட், எஸ்எஸ்எல்சி டி-1 இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இரு செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கான 6 மணி நேர கவுன்ட் டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கியது.
145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாக படம் பிடிக்க முடியும்.