குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்கு செலுத்திய முக்கிய தலைவர்கள்..! 

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் சுலபமாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவர். 

பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள வலுவான பெரும்பான்மையாக, ஜெகதீப் தன்கர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vice-President election 2022 live | Voting begins; PM Modi casts vote - The  Hindu

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஆதரவு கோரி மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மார்கரெட் ஆல்வாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *