தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி..!! கைது  செய்த காவல்துறை..!!

காங்கிரஸ் கட்சியினர் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

போராட்டத்தில் இருந்தவர்களை கலைக்க முயன்ற போலீஸ்  நடுரோட்டில் போராடிய பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தினர். வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரான காங்கிரஸ் கட்சியினர் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் காங்கிரஸ் கட்சி  இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரச்சனைகளுக்கு போராடுவது தான் எங்கள் பணி என்றும் அதற்காக கைது செய்வதா என்று ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர் என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *