தனது சமூக ஊடக முகப்பு பக்கத்தில் தேசியக் கொடியை மாற்றிய பிரதமர் மோடி.!!

நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 2 ஆம் தேதியான இன்று அவர் தனது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக இந்திய தேசியக் கொடியை மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிறப்பான நாள். நாம் விடுதலையின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 

நான் எனது சமூக ஊடகங்களின் முகப்புப் படங்களை மாற்றியுள்ளேன். நீங்கள் அனைவரும் அதே போல் மாற்ற வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார்.

அப்போது பிரதமர் மோடி நமது நாடு சுதந்திரம் அடைந்து 75ம் ஆண்டை நிறைவு செய்ய உள்ளோம். இதையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டுகிறேன். இந்த இயக்கத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *