நேஷனல் ஹெரால்டு வழக்கு..!! மீண்டும் அமலாக்கத்துறை சோதனை..!! 

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 800 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட் ஜர்னல்ஸ் லிட் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

இந்த கையகப்படுத்தல் காரணமாக அசோசியேட் ஜர்னல்ஸ் லிட். நிறுவனத்தின் ரூ.800 கோடி சொத்துக்கள் யங் இந்தியா நிறுவனத்தின் சொத்துக்களாக மாறியதால், அதற்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு.. அமலாக்கத்துறை சோனியாவிடம் 11 மணி நேரம் விசாரணை!!

யங் இந்தியன் நிறுவனம் லாப நோக்கமற்ற என்பதால் வரி கட்டத் தேவையில்லை என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பரிமாற்றத்தில் நிதி மோசடி நடந்திருப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனோடு தொடர்புடைய 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நேஷனல் ஹெரால்டு சொத்துக்கள் முடக்கம் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *