கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் மேலும் நீட்டிப்பு – சிங்கப்பூர் அரசு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலத்தை சிங்கப்பூர் அரசு மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். 

போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் அதிபர் மாளிகை அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால், இலங்கையில் தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கப்பூரிலும் எதிர்ப்பு கிளம்பியதால் அவரை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில்  சிங்கப்பூர் அரசு தற்காலிகமாக தங்கும் அனுமதியை வழங்கியது. இதையடுத்து ஓரிரு நாட்களில் கோத்தபய நாட்டை விட்டு வெளியேற கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் கோத்தபாயவிற்கு வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி ஆகஸ்ட் 11ம் தேதி வரை 14 நாட்கள் நீட்டித்துள்ளது சிங்கப்பூர் அரசு. 

கோத்தபய சார்பில் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் பயண அனுமதி நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளிநாடு செல்ல ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *