பிலிப்பைன்சில் நிலநடுக்கம் : இரண்டு பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்சில் அப்ரா மாகாணம் மற்றும் மணிலா உள்ளிட்ட பகுதிகளில்  7.3 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்து உள்ளனர் என கூறப்படுகிறது. 

பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டது. 

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சில கட்டிடங்கள் சேதமாகியுள்ளன. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

நில அதிர்வு மையம் அப்ரா மாகாணத்தில் உள்ள டோலோரஸ் நகரத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு சுமார் 11 கி.மீ.தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *