ராகுல் காந்தி கைது..!! அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து போராட்டம்..!!

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி போராட்டம் நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளார். 

இன்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல் முறை ஆஜரான நிலையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. 

இந்நிலையில், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்ந்து சோனியா காந்தி ஆஜரானதுக்கும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணி சென்றனர். அமலாக்கத்துறை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *