தேசிய சொத்துக்களை விற்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது – இம்ரான் கான்
இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலை, கூடிய விரைவில் பாகிஸ்தானிலும் ஏற்படும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது போல, விரைவில் பாகிஸ்தான் நாட்டிலும் மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் தப்பி ஓடியதை மேற்கோள் காட்டி இம்ரான் கான் அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை வெளியிட்டார். முதல் பதிவில் கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானை கொள்ளையடித்து வருகின்றனர் இதுவே தற்போது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.
இந்த திருடர்கள் எங்களின் தேசிய சொத்துக்களை வஞ்சகமான முறையில் விற்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது. நமது தேசிய சொத்துக்களை வைத்து அவர்களை நாடு ஒருபோதும் நம்பாது என கூறியுள்ளார்.
ஜர்தாரி குடும்பத்துடன் சேர்ந்து ஊழல்கள் குறித்து எழுதப்பட்ட தொகுதிகளை வைத்திருக்கும் குற்ற அமைச்சரின் தலைமையிலான அமெரிக்க சதி மூலம் இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை எப்படி நம்புவது, தேசிய சொத்துக்களை விற்பது மற்றும் அதுவும் அனைத்து நடைமுறை மற்றும் சட்ட சோதனைகளையும் புறக்கணித்து நம்பலாம்.இதை எத்தனை காலத்திற்கு தான் அரசு அமைப்புகள் வேடிக்கை பார்க்கும் என்பது தான் என் கேள்வி என்று பதிவிட்டுள்ளார்.