அதிகரிக்கும் குரங்கு அம்மை..!! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!!

குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை மொத்த பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்த நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

அவரை தொடர்ந்து கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 3வது நபராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 4வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.

இவர் வெளிநாடு செல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *