இலங்கையில் தொடரும் போராட்டம்..!!  எச்சரிக்கும் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய நிலையில் கடந்த 9ஆம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தப்பய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார். 

மேலும் அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் பொதுமக்கள் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இவர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள பல்வேறு இடங்களில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை ராணுவத்தினர் தூக்கி எறிந்தால் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படியும், அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் வரை மக்களுக்கு நான் உறுதியானதாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார். போராட்டம் வன்முறையாக மாறும் போது அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *