நீட் தேர்வு: ஆடை சர்ச்சை விவகாரம்..!! விளக்கம் அளித்த தேசிய தேர்வுகள் முகமை..!!

நீட் தேர்வு ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது. கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற அதிகாரிகள் நிர்பந்தித்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பாக தற்போது தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு மையத்திற்கு சென்ற மாணவர்களிடம் ஊழியர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்துள்ளனர். 

மேலும், மாணவிகளின் உள்ளாடைகளை களைந்தும் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.  இதனால், மாணவிகள்  மனதளவில் பெரியளவு பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவி ஒருவர் கொல்லம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, அது போன்ற ஒரு சம்பவம் அந்த குறிப்பிட்ட மையத்தில் நடைபெறவில்லை என்றும், மேலும் அந்த மாணவி நீட் தேர்வு எழுதியுள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக எந்தவொரு புகாரும்  வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *