குடியரசு துணைத் தலைவர் தேர்தல்..!!  வேட்பு மனு தாக்கல் செய்த மார்கரெட் ஆல்வா..!

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.

இதை  தொடர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக அணி சார்பில் ஜெகதீப் தங்கர், மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் அல்வாவும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா ஒன்றிய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.  இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடிவடைகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *