நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆக்க பூர்வமானதாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆக்க பூர்வமானதாக அமைவதை எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடர்ந்து அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 24 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

அக்னீபாத் திட்டம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். குடும்ப நீதிமன்ற திருத்த மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி  

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆக்க பூர்வமானதாக அமைய திறந்த மனதுடன் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். நாம் 75 வது சுதந்திர தினத்தை அமிர்த பெரும் விழாவாக கொண்டாடும் காலம். நமது பயணத்தை முடிவு செய்ய தீர்மானம் இயற்றப்பட்ட வேண்டிய தருணம் இது.

திறந்த மனதுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். தேவைப்பட்டால் விவாதம் செய்வோம் என்றார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் காலம் என்பதால் மிகவும் முக்கியமான கூட்டத் தொடராக இதை பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *