அதிக வரிகள், வேலைகள் இல்லை – ராகுல் காந்தி கடும் கண்டனம்

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அழித்து விட்டது என ராகுல் காந்தி தனது ட்வீட் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைத்து புதிய ஜிஎஸ்டி வரியை கொண்டு வர கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளையும், பேக் செய்யப்படாத அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இன்று முதல் விலை அதிகமாக இருக்கும் பொருட்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. வரியை கப்பர் சிங் டேக்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அதிக வரி, வேலை இல்லை. ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எப்படி அழிப்பது என்பது தான் பாஜகவின் மாஸ்டர் கிளாஸ் எனக் கூறியுள்ளார்.