கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் மூலம் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள்..!!
சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் நீதி கேட்டு சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி எதிரே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் இளைஞர்கள் 1000ம் பேர் திரண்டு சாலை மறியல் சரமாரியாக கல்வீச்சு தாக்குதலால் போலீஸார்கள் படுகாயம் இச்ச சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் பள்ளியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பள்ளி பகுதியில் திரண்டதால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் இரும்பு தடுப்பு கட்டையை வைத்து தடுக்கப்பட்டன அதனை தகர்த்து எறிந்து இளைஞர்கள் பள்ளிகள் முன்பு கற்களே வீசியதால் போலீஸார்கள் லேசான தடியடி நடத்தி போராட்டத்தர்களை கலைக்க முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கிடந்த கற்களை கொண்டு சரமாரியாக பள்ளி வளாகம் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசர்கள் மீது கற்களை வீசி வருவதால் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.
கள்ளக்குறிச்சி வன்முறை – வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து திரண்ட போராட்டக்காரர்கள். ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் – உளவுத்துறை விசாரணையில் தகவல்