போராட்டக்காரர்கள் அதிரடி..!! இலங்கை அரசு தொலைக்காட்சி முற்றுகை..!! 

இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர்  போராட்டக்காரர்கள்  முற்றுகையிட்டனர்.   

இதனிடையே அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனால் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை இன்று அதிகாலை சென்றடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில், இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதற்கிடையில், இடைக்கால இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என கூறப்படுகிறது.

போராட்டக்காரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *