அக்னி பாதை திட்டம் எதிர்காலத்தில் ஜப்பான் போன்ற நிகழ்வை உண்டாக்கும் – திரிணாமுல் காங்கிரஸ்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற இளைஞர் ராணுவத்தில் குறுகிய கால இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பேசுகையில் ஒன்றிய அரசு ராணுவத்தில் அக்னி பாதை போன்ற திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக மேற்குவங்க மாநிலத் தலைவர் இந்தியாவில் எந்த ஒரு முன்னாள் ராணுவ வீரரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளது. திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் நேற்று பேசுகையில், பாஜக அக்னி பாதை திட்டத்தின் மூலம் நெருப்புடன் விளையாடுகிறது என்று தெரிவித்தார்.
ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார். இந்நிலையில் அபேவை கொலை செய்த டெட்சுயா யமாகாமி 3 ஆண்டுகள் கடற்படையில் வேலை செய்தார்.
ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியம் எதுவும் வராத நிலையில் அவர் விரக்தியில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.