முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்டார்..!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ துப்பாக்கியால் சுடப்பட்ட  அங்கிருந்து தப்பி ஓடினார்.   

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில் துப்பாக்கியால் சுட்டதில், அவர் மார்பு பகுதிகள் குண்டுகள் பாய்ந்தது. இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு நடந்தை தொடர்ந்து உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து ஷின் சோ அபே உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை போலீசார் செய்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.  

ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020ல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை வகித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *