பயணிகள் அச்சம்..!! தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம்..!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய்க்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம்  இன்று காலை தலைநகர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் சுமார் 150 பயணிகளுடன் டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இண்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *