பிரதமர் மோடி இரங்கல்..!!  இமாசலப் பிரதேசத்தில் தனியார் பள்ளி பேருந்து விபத்து..!!

இமாசலப் பிரதேசத்தில் தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குலு மாவட்டத்தில் ஜங்லா பகுதியில் பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்தது. இந்தப் பேருந்து குழுவிலிருந்து சைஞ்ச் நோக்கி காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது. 

தகவலறிந்து மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தன. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்தார். மேலும் பள்ளிப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *